சைவசமய பாதுகாப்பு சபை




28.07.2018 அன்று 
வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய சைவசமய பாதுகாப்புச்சபையினரால் நடாத்தப்பட்ட பூங்காவன உற்சவத்தின்  சில பதிவுகள்











கலை நிகழ்வின் ஆரம்பம் மற்றும் தலைமையுரை, ஆசியுரை, சிறப்புரை, நன்றியுரை, செயற்பாட்டறிக்கை










இறைஅர்ப்பண  நிகழ்வின் கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் சிறப்பு விருது வழங்கல்#
இவ்வருடம் எமது சபையினால் சிறப்பாக நடாத்தப்பட்ட இறைஅர்ப்பண நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கல் நிகழ்வு KP foundation நிறுவனத்தினரின் அனுசரணையுடன் பூங்காவன கலைநிகழ்வு அரங்கில் இடம்பெற்றது.
அத்துடன் ஆலய மஹோற்சவகாலத்தில் சிறப்பாக பணியாற்றியவற்றியவர்களிற்கும் குறித்த நிறுவனத்தால் விசேட விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விருதுகளை KP பவுண்டேசன் நிறுவன உறுப்பினர் திருமதி ஜெயதேவி ரகுநாதன் (முன்னாள் ஆசிரியை-யா/தேவரையாளி இ.க) அவர்கள் கலைஞர்களிற்கு வழங்கி கௌரவித்தார்.





















#என்றும் எங்களுடன் கைகோர்க்கும் சப்தம்ஸ் கலைஞர்கள்#
இம்முறை முக்கியமான உறுப்பினர்கள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வர முடியாது போனாலும் யாழ்மாவட்ட முண்ணனி கலைஞர்களான அருணாவின் சதீஸ் (base guitar), ராகம்ஸின் நிக்சன் (ஓகன்) உடன் இணைந்து எந்தவித ஒத்திகையும் இல்லாது ‘வர்சன் எலக்ரோனிக்ஸ்” அனுசரணையில் சிறப்பான இசைவிருந்தினை வழங்கிய சப்தம்ஸ் கலைஞர் குழாமிற்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் சிறந்த ஒலியமைப்பினை தொடர்ச்சியாக வழங்கி வரும் சோபி சவுண்ட்ஸ் நிறுவனத்தினருக்கும், ஒளி அமைப்பினை வழங்கி வரும் மிதிலன் நிறுவனத்தினருக்கும் எமது சபையின் நன்றிகள். 























விழா வெகுசிறப்பாக நடைபெற்று சபையின் செயலாளரின் நன்றியுரையுடன்இனிதே நிறைவேறியது